'தர்பார்' பட நடிகைக்கு திருமணம்: ஒரு ஆண்டாக லிவிங் டுகெதரில் வாழ்ந்தவர்!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது காதலருடன் லிவிங்டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தர்பார்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவருடன் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் நடிகை ஷமதா அஞ்சான். இந்த நிலையில் இவர் தனது காதலர் கவுரவ் வர்மா என்பவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இவர் தன்னுடைய திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தொலைக்காட்சி நடிகையான ஷமதா அஞ்சான், ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் சுமார் 40 நாட்கள் நடித்து இருந்தார் என்பதும் ரஜினியுடன் நடித்த ஒவ்வொரு நாளும் தனக்கு மறக்க முடியாத நாளாக இருந்தது என்று ஏற்கனவே அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உங்களுக்கு பொழுதுபோக்கு எனக்கு தொழில்: ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அஜித் அறிக்கை!

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சொந்த மண்ணில் சதம் மற்றும் 5 விக்கெட்டுக்கள்: அஸ்வினுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பது தெரிந்ததே

'முரட்டு சிங்கிள்ஸ் டே' கொண்டாடிய பாலாஜி: ஷிவானிக்கு மட்டும் கேக் ஊட்டாதது ஏன்?

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடிய நிலையில் காதலன் அல்லது காதலி இல்லாதவர்கள் முரட்டு சிங்கிள்ஸ் டே' கொண்டாடி காதலர்களுக்கு வெறுப்பேற்றினர்.

ஒரு வழியாக 'வலிமை' அப்டேட் தந்த போனிகபூர்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் இந்த படத்தின் உள்நாட்டு

அர்ச்சனா வெளியே, வனிதா உள்ளே: ஜீடிவியின் முக்கிய சீரியலில் வனிதா!

ஜீ டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த டிவியில் இருந்து வெளியேறினார்