19 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. பிரபல நடிகருக்கு மகளாக நடித்தவர்..!

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

பிரபல நடிகருக்கு மகளாக நடித்த 19 வயது நடிகை திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’டங்கல்’. இந்தி, தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையான கீதா போகத் மற்றும் அவரது சகோதரி பபிதா குமாரி ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு தான் ‘டங்கல்’ படம்.

இந்த படத்தில் கீதா போகத் கேரக்டரில் நடிகை ஃபாத்திமா சனாவும், பபிதா குமாரி கேரக்டரில் சான்யா மல்ஹோத்ராவும் நடித்திருந்தனர். மேலும் சின்ன வயது பபிதா கேரக்டரில் சுஹானி நடித்திருந்த நிலையில் ‘டங்கல்’ படத்தில் நடித்த சுஹானி இன்று காலை காலமானார்.

‘டங்கல்’ படத்தில் சுஹானி நடிக்கும்போது அவரது வயது 11 தான், அதன் பிறகு படிப்புக்காக அவர் நடிப்பை துறந்த நிலையில் சமீப காலமாக இந்தி சீரியல்களில் நடித்து வந்தார்.

19 வயது நிரம்பிய சுஹானி டெல்லி அருகே உள்ள பரிதாபாத் நகரில் வசித்து வந்த நிலையில் இன்று காலை அவர் திடீரென காலமானார். அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் இதை அடுத்த டெல்லி அருகே மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காலமானார் என்றும் தெரிகிறது.

கடந்த ஆண்டு நடந்த விபத்தில் சுஹானிக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில் அதற்காக சுஹானி தொடர்ந்து சிகிச்சை பெற்றதாகவும் தொடர் சிகிச்சையில் உட்கொண்ட மருந்து மாத்திரை காரணமாக அவருக்கு பக்க விளைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடலில் இருந்து நீர் வெளியேறாமல் அவரது உடல் மோசமானதாகவும் இதை தொடர்ந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

நடிகை சுஹானி மறைவை அடுத்து அமீர்கான் மற்றும் ‘டங்கல்’ படக்குழுவினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News

நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விஜய், அஜீத்தின் முடிவை பார்த்து பயப்படும் திரையரங்கு உரிமையாளர்கள்.. என்ன காரணம்?

நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் திரையுலக பயணம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பயப்படுவதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

கோபித்து கொண்ட ரசிகர்.. 'சென்னைக்கு வா பிரதர்' என சமாதானம் செய்த ஜெயம் ரவி..!

நடிகர் ஜெயம் ரவி மீது அவரது தீவிர ரசிகர் ஒருவர் கோபித்துக் கொண்ட நிலையில் 'சென்னைக்கு வாருங்கள்' என்று அவரிடம் கூறி சமாதானம் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'அமரன்' வார்த்தைக்கு என்ன அர்த்தம்? 3 பேருக்கு நன்றி சொன்ன ராஜ்குமார் பெரியசாமி..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் 'அமரன்' என்று நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் நேற்று டைட்டில் உடன் வெளியான டீசர்

விஜயகுமார் பேத்தி திருமணம்.. பந்தக்கால், சுமங்கலி பூஜை.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் வரும் 19ஆம் தேதி சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் நடைபெற இருக்கும் நிலையில்