ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டங்கள்: கலா மாஸ்டரின் நெகிழ்ச்சியான பேட்டி!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஆரம்ப காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து கூறினார்கள். கலா மாஸ்டர் தனது அனுபவம் குறித்து கூறிய போது ’ஆரம்பத்தில் தான் கருப்பாக இருந்ததால் கடைசி வரிசையில் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் தன்னுடைய டான்ஸ் திறமையை பார்த்து எந்த தயாரிப்பாளர் கடைசி வரிசைக்கு தள்ளினாரோ, அதே தயாரிப்பாளர் தன்னை முதல் வரிசையில் நிற்க வைத்தார் என்றும் நம்முடைய வேலையை நாம் சரியாக இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும் சினிமாவில் ஆண்கள் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம் தான் இருக்கும் என்றும், குறிப்பாக டான்ஸ் துறையில் அதிகம் இருந்தது என்றும் அப்போதெல்லாம் டான்ஸ் குழுவில் ஒரு சில பெண்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் அதனால் எங்களுக்கு ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கஷ்டம் இருந்தது என்றும் கூறினார்.

உதவி நடன இயக்குனராக இருக்கும் போது ஒருசிலர் தங்களை மதிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் அதன்பின் தங்களது திறமையை வெளிப்படுத்திய பின் தான் மதிப்பு உயர்ந்தது என்றும் கூறினார்கள். மேலும் நாங்கள் பெண்கள் போலவே வளரவில்லை எங்கள் தாயார் எங்களை ஆண்கள் போலவே தான் வளர்த்தார் என்றும், நாங்கள் ஆண்கள் போலவே படப்பிடிப்பும் நடந்து கொண்டோம் என்றும் கூறினார். நாங்கள் வலுக்கட்டாயமாக தான் பிருந்தாவை இந்த துறைக்கு அழைத்து வந்தோம் என்றும், அவர் நன்றாக படிக்க வேண்டும் என்றுதான் விரும்பினார் என்றும், ஆனால் அந்த நேரத்தில் எங்களுக்கு ஆள் தேவைப்பட்டதால் பிருந்தாவை நாங்கள் வலுக்கட்டாயமாக இந்த துறைக்கு அழைத்து வந்தோம் என்றும் கலா மாஸ்டர் கூறினார்

மேலும் தங்களுடைய மாஸ்டர் ரகு தங்களுக்கு கூறிய முக்கிய அறிவுரை என்னவெனில் கண்டிப்பாக என்னுடைய பெயரை பயன்படுத்தாமல் உன்னுடைய திறமையின் மூலமே நீ டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என்று கூறி இருந்தார் என்றும் ,அதை நாங்கள் கடைசிவரை காப்பாற்றினோம் என்றும் அவர் தெரிவித்தார்

எங்கள் இருவருக்கும் ஒரு முக்கிய எண்ணம் இருந்தது, என்னவெனில் டான்ஸ் மாஸ்டர்களில் எவ்வளவு போட்டி இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட கூடாது, நீ உன்னை ஜெயிக்க வேண்டும், நீ உன்னை ஜெயித்தால் போதும், சக போட்டியாளர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதுதான், அதில் தான் நாங்கள் இருவரும் விடாப்பிடியாக இருந்தோம் என்றும் பிருந்தா கூறினார்.

More News

ஆட்டோ ஓட்டுநரின் மகள் உலகின் நெம்பர் ஒன் சாம்பியன்… இந்திய வில்வித்தையில் புது புயல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்றது.

ஆபாச பேச்சு..போதை ஆட்டம்....! சில்மிஷ சிக்கா சூர்யா, சேனலுக்கு ஆப்பு வைத்த கோர்ட்...!

சமூகவலைத்தள பிரபலமான ரவுடி பேபி சூர்யாவின் யுடியூப் பக்கத்தை முடக்கவேண்டும் என, நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? கஸ்தூரி சந்தேகத்தை தீர்த்த ரஜினி தரப்பினர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்தியாவிலிருந்து கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்காவுக்கு யாரையும் அனுமதிக்கவில்லை.

கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்களின் பதில்!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஓடிடியில் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்? வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில், ஊரடங்கு காரணமாக திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.