டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது.. தலைமறைவாகியிருந்தது எங்கே? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான ஜானி மீது, 21 வயது பெண் நடனக் கலைஞர் ஒருவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான் 18 வயது நிரம்பாத நிலையில் ஜானி மாஸ்டர் எனக்கு பாலியல் வன்முறையை மேற்கொண்டார். மேலும், அவரிடம் உதவி நடன இயக்குநராக வேலை செய்யும் என்னிடம் பலமுறை பாலியல் வன்முறை செய்தார் என்று அந்த பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.

புகார் அளித்த பெண் 18 வயது நிரம்பாத நிலையில் குற்றம் நடந்திருப்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தெலுங்கானா காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், ஹைதராபாத் அழைத்து வரப்பட்டு, மருத்துவ சோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையிலிருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும், அதேபோல் ஜனசேனா கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. ரோகிணி புகாரால் டாக்டர் காந்தாராஜ் எடுத்த அதிரடி முடிவு..!

நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் டாக்டர் காந்தராஜ் பேசிய நிலையில் அவர் மீது நடிகை ரோகினி புகார் அளித்த நிலையில் தற்போது டாக்டர் காந்தா ராஜ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு குஷி..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது

ஒரே வருடத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்கினாரா ஏஆர் முருகதாஸ்.. ஆச்சரிய தகவல்..!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்

தனுஷ் விவகாரத்தில் தலையிடும் பெப்சி.. நடிகர் சங்கம் கண்டனம்..!

நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க ஃபெப்சி வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்திய வழக்கு: தமிழ் இயக்குனர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை..!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது