வடமாநில தொழிலாளர்களை கடுமையாக தாக்கிய தேமுதிக பிரமுகர்.....! கைது செய்த போலீசார்....!

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

சென்னையில் வீட்டு வாடகை தராத வடமாநில இளைஞர்களை தேமுதிக பிரமுகர், கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை, குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பவர் தான், தேமுதிக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜ்(40).

ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர் பிரதாப், இவரது சகோதரர் சஞ்சய்குமார்(32). இவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு, வட மாநில தொழிலாளர்களை விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகிறார்கள். இவர்கள் திருமுடிவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதேபோல் வேலை தேடி வந்த 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களும், அங்கு வாடைகைக்கு தங்கியுள்ளனர்.

கொரோனா காரணத்தால், அந்த தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். அடிக்கடி சுரேஷ்ராஜ் வாடகை கேட்டுள்ளார். விரைவில் தந்துவிடுவோம் என கூறியவர்கள், ஊரடங்கு காரணமாக அண்மையில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்துகொண்ட சுரேஷ் நேற்றைய முன்தினம் வடமாநில தொழிலாளர்களிடம் வாடகை கேட்டு அடித்துள்ளார். அவர்கள் துணிகளை கழட்டியும், முட்டுப்போட வைத்தும், சரமாரியாக தாக்கியுள்ளார் சுரேஷ். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, குன்றத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சுரேஷை நேற்று கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த கமல்-ரஜினி படங்களின் காமெடி நடிகர்!

பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் ஜனகராஜ் இன்று தனது பிறந்தநாளை

மாஸ்க் போட்டா மூச்சு முட்டும்… பக்கவிளைவு? அசட்டுத்தனமான கேள்விகளுக்கு அறிவியல் பதில்!

கொரோனா நேரத்தில் உயிர்காக்கும் கவசமாக மாஸ்க் செயல்படுகிறது  என உலகச் சுகாதார மையம் முதற்கொண்டு மருத்துவர்கள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வரலாறு படைத்தவர்களாக இருக்க வேண்டிய நாம் வரலாறு படிப்பவர்களாக மாறி விட்டோமே: மநீமவில் இருந்து விலகியவரின் கடிதம்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி ஆனதை அடுத்து அந்தக் கட்சியிலிருந்து அடுத்தடுத்து பல பிரமுகர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு....! மதுரையில் எகிறும் பாதிப்பு...!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்

இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைக்கு விராத் கோஹ்லி செய்த நெகிழ்ச்சியான உதவி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயார் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின்