ஃபேஸ்புக்கில் பெண்ணுடன் பழக்கம்: சபலத்துடன் சென்ற வாலிபர் நிர்வாணமாக்கப்பட்ட கொடூரம்!

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற வாலிபர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட சம்பவம் கடலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 28 வயது வாலிபர் வினோத்குமார். வெப் டிசைனர் ஆக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேஸ்புக்கில் நிஷா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் அவ்வப்போது ஆபாச புகைப்படங்களை அனுப்பி வினோத்குமாரின் சபலத்தை தூண்டி விட்டுள்ளார். இதனை அடுத்து சபலத்திற்கு ஆளான வினோத்குமார் நிஷாவுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

இந்த நிலையில் வினோத்குமாரை நேரில் சந்திக்க நிஷா அழைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பண்ருட்டியில் இருந்து திருச்சிக்கு பைக்கில் சென்ற வினோத்குமார் நிஷா கூறிய இடத்திற்கு சென்று அவரை நேரில் பார்த்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்குமாரை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பர்ஸ், ஸ்மார்ட்போன், ஏடிஎம் கார்டு மற்றும் பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கிருந்த ஒரு சில நபர்களிடம் துணியை வரவழைத்து அணிந்து கொண்ட வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் நிஷா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இன்னும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தமிழ் நடிகர் இயக்கிய படத்திற்கு கனடாவில் கிடைத்த கெளரவம்!

'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவராட்டம்' உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் 'கன்னிமாடம்'

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் தற்போது மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

போதை பொருள் வழக்கில் மேலும் ஒரு பிரபல நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகை ராகினி திவேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்

தமிழகத்தில் மின்னணு, ஹார்டுவேர் உற்பத்தியை அதிகரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்!!!

தமிழகத்தில் மின்னணு மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியைத் அதிகப்படுத்த தமிழக அரசு அதிரடி திட்டத்தை மேற்கொண்டு இருக்கிறது

அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள்: உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனா உள்பட ஒரு சில நாடுகளிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது.