'கருடன்' படம் பார்க்க டிக்கெட் கொடுத்த தியேட்டர் நிர்வாகம்.. வட்டாட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை..

  • IndiaGlitz, [Saturday,June 01 2024]

சூரி நடித்த ’கருடன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படத்தை பார்க்க நரிக்குறவர்கள் வந்த போது அவர்களுக்கு டிக்கெட் தர மறுக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவியதை அடுத்து அதிரடியாக கடலூர் மாவட்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து அந்த நரிக்குறவர்களுக்கு டிக்கெட் வழங்க உத்தரவிட்டார். இதனை அடுத்து நரிக்குறவர்கள் டிக்கெட் வாங்கி இந்த படத்தை தியேட்டரில் பார்த்து உள்ளனர்.

’கருடன்’ படம் பார்க்க தங்களுக்கு தியேட்டரில் அனுமதிக்க அனுமதி மறுக்கப்பட்டது என்று பாதிக்கப்பட்ட நாடோடி பழங்குடியினர் வேதனையுடன் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சிம்புவின் ‘பத்து தல’ படத்தை பார்க்க வந்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் கொடுத்த மறுத்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.