close
Choose your channels

முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

Saturday, November 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90
கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கியூபாவை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் தலைவரான பிடல் காஸ்ட்ரோ, வயோதிகம் காரணமாக தனது சகோதரரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவை அவரது சகோதரரும், கியூபா அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை குறிப்புகள்:
1926: கியூபாவின் தென்கிழக்கு ஓரியண்டே மாகாணத்தில் பிறந்தார்
1953: பாட்டீஷா அரசை எதிர்த்து நடந்த கொரில்லா போரில் கலந்து கொண்டதால் சிறை சென்றார்
1955: சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
1959: மீண்டும் சேகுவாராவுடன் இணைந்து அரசுக்கு எதிரான கொரில்லா போரில் கலந்து கொண்டார். இந்த போரில் கிடைத்த வெற்றியால் பிரதமர் ஆனார்.
1976: கியூபாவின் அதிபராக தேர்வு பெற்றார்.
1992: அமெரிக்காவுடன் அகதிகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்
2008: முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகினார்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment