திருவனந்தபுரம் மைதானம் முழுவதும் சிஎஸ்கே போஸ்டர்கள்.. என்ன நடக்குது 'கோட்' படப்பிடிப்பில்?

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த மைதானத்தில் ‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி மைதானம் முழுவதும் சிஎஸ்கே அணியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கும் சிஎஸ்கே அணிக்கும் என்ன சம்பந்தம் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் ஒருவேளை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிஎஸ்கே அணியினர் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார்களா? குறிப்பாக தல தோனி தோன்றுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக நடித்திருப்பதாக தகவல் வெளியானால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் திருவனந்தபுரம் மைதானத்தில் ‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More News

ரூ.2 கோடி மதிப்பில் பிரமாண்ட செட்.. இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு.. ஜெயம் ரவி படத்தின் அப்டேட்..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது கமல்ஹாசன் உடன் 'தக்லைஃப்', எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிரதர்' மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெனி 'ஆகிய மூன்று

கேரளா சென்ற விஜய்க்கு நேர்ந்த விபரீதம்.. ரசிகர்களின் அன்புத்தொல்லையால் ஏற்பட்ட சேதம்..!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாகவும்

சூர்யாவின் 'புறநானூறு' படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'புறநானூறு' என்ற படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு

பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல அது ஆண்களுக்கும் உரியது என்பதற்கு தகுந்த விளக்கம் அளித்த எழுத்தாளர் சாலின் மரியா லாரன்ஸ்.

முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அவர்களுமே சண்டை போட்டு அவமானப்படுத்தப்பட்டு வாங்கி கொடுத்ததே இந்த மருத்துவ கல்வி.எனவே எல்லாமே இங்கு கஷ்டப்பட்டு தான் நாம் அடைந்துள்ளோம்‌.....

மதுரை சித்திரை திருவிழா 2024: பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 12 நாள் பிரம்மாண்ட விழா

மதுரையின் இதயமாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான (2024) திருவிழா அட்டவணையை கோயில் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டது.