நாங்கள் வேலையில்லாதவர்களா? சித்தார்த் குற்றச்சாட்டுக்கு சிஆர்பிஎப் வீரர் பதில்!

  • IndiaGlitz, [Thursday,December 29 2022]

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்தியில் பேசி துன்புறுத்தினார்கள் என நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இதற்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த்தின் பெற்றோர்கள் சமீபத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அவர்களை சோதனை செய்த சிஆர்பிஎஃப் அதிகாரிகள் ஹிந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தினார்கள் என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறு தான் கூறிய போதிலும் அவர்கள் தொடர்ந்து இந்திய பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது பெற்றோர்கள் வைத்து இருந்த சில்லரை காசுகளை எடுத்து காட்டும்படி சிஆர்பிஎஃப் வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள் என்றும் ஒரு வயதானவர்களை இப்படியா நடத்துவது என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் வேலை இல்லாதவர்களின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும் அவர் பதிவு செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். அதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் எந்த ஒரு இந்திய மொழிகளிலும் பேசலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்களுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி தெரிந்துள்ளதோ, அந்த மொழியில் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் வெள்ளைக்காரனின் ஆங்கில மொழியை நாங்கள் பேச வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் விமான பயணிகளை சோதனை செய்வது அவர்களது கடமை என்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் பெற்றோர்களே வந்தால் கூட அவர்களையும் சோதனை செய்துதான் அனுப்புவார்கள் என்றும் எனவே தங்களது கடமையை செய்யும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது சித்தார்த் குற்றம்சாட்டி பேசியது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் வேலை இல்லாதவர்கள் கிடையாது என்றும் எங்களுடைய கடமையை நாங்கள் செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அருண் விஜய் நடித்த 'யானை' மற்றும் 'சினம்'ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அருண் விஜய் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து தனலட்சுமி எலிமினேட் செய்யப்படவில்லையா? ஹாட்ஸ்டார் பதிவால் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது என்பதும், இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பதை

நடுரோட்டில் கணவர் முன் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல நடிகை: வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம்!

வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் நடுரோட்டில் பிரபல நடிகை ரியா குமார் என்பவர் அவரது கணவர் முன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை நீங்க எதிர்பார்க்கவே இல்லையில... கதிரவனை பார்க்க வந்த இந்த இளம்பெண் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

எடப்பாடியார் ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது: போர்டு எழுதிய மாட்டிய தமிழ் நடிகர்!

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது என தமிழ் நடிகர் ஒருவர் வாடகைக்கு வீடு விடப்படும் என்ற போர்டில் எழுதி மாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.