மனைவிக்காக கடலில் குதித்த ரோஹித் சர்மா… நெகிழ்ச்சி சம்பவம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியடைந்தது. இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா குறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி தற்போது ரசிகர்களிடையே சிறிது ஆசுவாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்றது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியக் கிரிக்கெட் அணி கோப்பைகளை வெல்லாமல் தற்போது இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவி இருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா அணி தேர்வில் தவறிழைத்துவிட்டார் என்பதுபோன்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அடுத்து இந்தியக் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளுக்காக ஜுலை 12 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்ததால் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் என்ன நடக்கும்? ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி தப்பிக்குமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறுவாரா என்பதுபோன்ற விவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படும் வரும் நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவ் மற்றும் மகள் சமைராவுடன் கடலில் படகு சவாரி செய்தபோது ரித்திகா தனது செல்போனை கடலில் தவறவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரோஹித் உடனே கடலில் குதித்து அந்த செல்போனை மீட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துதான் தற்போது ரித்திகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நெகிழ்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தனது மனைவிக்காக ரோஹித் கொஞ்சமும் யோசிக்காமல் கடலில் குதித்த இந்தச் சம்பவம் தற்போது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

More News

கல்வி விருது விழாவில் 'அசுரன்' பட வசனத்தை பேசிய விஜய்..!

விஜய்யின் கல்வி விருது விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் தளபதி விஜய் சற்றுமுன் பேச தொடங்கினார். அதில் அவர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' படத்தின்

விஜய்-மாணவர்கள் விழா.. 90கி அரிசி, 1500 கி காய்கறிகள்.. தடபுடலாக தயாராகும் அறுசுவை விருந்து..!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு விருந்து, சான்றிதழ்

ரஜினியின் 'ஜெயிலர்' அடுத்தகட்ட பணி தொடக்கம்.. வைரல் புகைப்படம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணியை தொடங்கி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் சந்திப்பு.. விஜய் செய்த செலவு இத்தனை கோடியா?

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுடன் விஜய் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.

'எந்திரன்' கதை திருட்டு வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அதிரடி உத்தரவு நேற்று