பிரதமர் மோடியை நேரில் சந்தித்த சிஎஸ்கே வீரர்… காரணம் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,May 17 2023]

ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிவரும் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தனது மனைவியுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் வைரலான நிலையில் சந்திப்பிற்கான காரணங்கள் குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சிஎஸ்கே அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல 9 போட்டிகளில் பேட்டிங் செய்த அவர் 133 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தனது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா-வுடன் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூகவலைத் தளப்பக்கத்தில் வெளியிட்ட அவர், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அனைவரையும் ஊக்குவிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ரவீந்திர ஜடஜாவின் மனைவி ரிவாபா கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில் பாஜக சார்பாக ஜாம்நகர் வடக்குச் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதன் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பிரதமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத் தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
 

More News

அந்த படத்தில் நான் நடித்திருந்தால் ராஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த சூப்பர் ஹிட் படத்தில்  அவரது கேரக்டரில் நான்  நடித்திருந்தால் அவரைவிட நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மாமன்னன்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்.. வடிவேலு ரசிகர்கள் குஷி..!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சினிமாவை விட்டே வெளியேற நினைத்தேன்… விஜய் பட நடிகை கூறிய ஷாக்கான தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி வரும் நடிகை

திருமண செயலியில் வரன் பார்த்து சிக்கிய நடிகை… சரமாரியாக அடுக்கப்படும் குற்றச்சாட்டு!

தான் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஐடி ஊழியர் ஒருவர், புகாரை வாபஸ்

மக்களால் தேர்வான நடிகைக்கு பெயர் சூட்டிய பாரதிராஜா.. ராதிகா, ரேவதி வரிசையில் இன்னொரு 'ஆர்' நடிகை..!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படமான 'மார்கழி திங்கள்' என்ற படத்தின் நாயகியை மக்களே தேர்வு செய்ய ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது என்பதை