கவுண்டமணியை தற்செயலாக சந்தித்து புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர்

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

காமெடி அரசர் கவுண்டமணி நடிக்காத படமே ஒரு காலத்தில் இல்லை என்ற நிலையில் ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. காமெடி என்றாலே கவுண்டமணி தான் ஸ்பெஷல் என்ற அளவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கவுண்டமணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள பல பிரபலங்கள் ஆசைப்படும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்த பத்ரிநாத் தற்செயலாக அவரை சந்தித்தது புகைப்படம் எடுத்ததை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

பல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்கு சென்றபோது அங்கு தற்செயலாக பழம்பெரும் காமெடி நடிகர் கவுண்டமணி அவர்களை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார். மேலும் கவுண்டமணி தற்போது நடித்து வரும் ’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பதையும் பத்ரிநாத் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பத்ரிநாத் உடன் ஸ்டைலாக நிற்கும் கவுண்டமணியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

More News

ஜார்ஜ் ஃப்ளாயிட்டுக்கு என்ன நடந்தது??? பரபரப்பு ஏற்படுத்திய வீடியோவை வெளியிட்ட சிறுமி யார்!!! விரிவான தொகுப்பு!!!

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் மிணசோட்டா மாகாணம் மினியா காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது உலக மக்களிடையே இனவெறி குறித்த கருத்துகளை விவாதிக்க வைத்திருக்கிறது.

சென்னையில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒரே படத்தில் விக்ரம்-துருவ் விக்ரம் இணைகின்றார்களா? ஆச்சரிய தகவல்

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' என்ற திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கு பிரபல நடிகை கண்டனம்!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிஷ்கின் - அருண்விஜய் இணையும் படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

பிரபல இயக்குனர் மிஷ்கின், விஷால் நடித்த 'துப்பறிவாளன் 2' என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அவருக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'துப்பறிவாளன் 2'