பிக்பாஸ் நடிகை படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் கிரிக்கெட் வீரர்!

  • IndiaGlitz, [Sunday,January 31 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவரான சாக்ஷி அகர்வால் ஏற்கனவே நான்கு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வாலுக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் ஏற்கனவே ’சின்ட்ரெல்லா’ ’ஆயிரம் ஜென்மங்கள்’ ’டெடி’, ’அரண்மனை 3’ ’புரவி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்

‘தி நைட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் படத்தை ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகனாக வேத் மற்றும் நாயகியாக சாக்ஷி அகர்வால் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு அன்வர் கான் தாரிக் என்பவர் இசையமைக்க உள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 

More News

சூர்யா-ரம்யா பாண்டியன் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சசிகலாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது: 'கபாலி' வசனத்துடன் தமிழ் நடிகையின் டுவீட்

தமிழக அரசியலில் சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என தமிழ் நடிகை ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 

'கர்ணன்' படத்தை அடுத்து 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த 'கர்ணன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இன்று காலை வெளியானது என்பது தெரிந்ததே.

தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் எப்போது? கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது