ஸ்லீப்பர்செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். சி.ஆர்.சரஸ்வதி 

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, கடந்த வாரம் ஐந்து நாள் பரோலில் வெளிவந்த நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, 'இந்த அரசு உருவாக மாண்புமிகு சின்னம்மாதான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம்' என்று கூறினார்

இதுகுறித்து கருத்து கூறிய தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி 'இந்த அரசு உருவாக சின்னம்மா தான் காரணம், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புக்கொண்டுள்ளார். இவரை தொடர்ந்து மேலும் ஸ்லீப்பர்செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் சின்னம்மா முகத்தை பார்த்த பின்னரும் உறுத்தாமல் இருக்குமா? என்று கூறினார்.

சி.ஆர்.சரஸ்வதி கூறுவது போல் செல்லூர் ராஜூவை தொடர்ந்து மேலும் சில ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மணிரத்னம் இயக்கும் தென்னிந்தியாவின் மல்டி ஸ்டார் படத்தின் விபரங்கள்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்

'ஸ்பைடர்' படத்தின் கடந்த வார வசூல் எப்படி?

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணியில் அமைந்த முதல் படமான 'ஸ்பைடர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற

முதலிடத்தை பிடித்த 'ஹரிஹர மகாதேவி'

கேளிக்கை வரிவிதிப்பு காரணமாக புதிய திரைப்படங்களை வெளிடுவதில்லை என்ற தமிழ் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு காரணமாக கடந்த வெள்ளியன்று எந்த தமிழ்ப்படமும் வெளியாகவில்லை.

மகனின் உயிரை காப்பாற்றிய தந்தையின் ஒரே ஒரு டுவீட்

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவை அரட்டை அடிக்கும் பொழுது போக்கு தளங்களாக இருந்த நிலைமை மாறி ஆக்கபூர்வமான பல விஷயங்களுக்கு உதவுகிறது என்பதை பல உதாரணங்களில் இருந்து பார்த்திருக்கின்றோம்.

'மாரி 2' படத்துக்கு மறுப்பு தெரிவித்தாரா அனிருத்?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கவுள்ள 'மாரி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தின் வில்லன் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் என்றுமுடிவாகியுள்ளது