பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்… ஊரடங்கு தளர்வு குறித்து எச்சரிக்கும் WHO!

  • IndiaGlitz, [Wednesday,July 07 2021]

பெரும்பாலான உலக நாடுகள் தற்போது கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதுகுறித்து உலகச் சுகாதார மையம் கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 2 பெரிய அலைகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அலறவிட்டு இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் அலையில் இருந்து வெளிவந்த பெரும்பாலான நாடுகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றன. மேலும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளது.

மேலும் அமெரிக்காவில் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற அடிப்படை பாதுகாப்பு விஷயங்களுக்கும் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள WHOவின் அவசரகால பிரிவின் தலைவர் மைக் ரியான், இதற்கு உலக நாடுகள் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும். உலக நாடுகள் இதுபோன்ற அவசர அவசரமாக முடிவுகளை எடுப்பதால் அடுத்த அலையை மிக விரைவில் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதைத்தவிர டெல்டா வகை வைரஸ் குறித்தும் WHO கடும் எச்சரிச்சை தெரிவித்து வருகிறது. மிக அதிக அளவில் பரவும் தன்மை கொண்ட இந்த டெல்டா வகை வைரஸ் இதுவரை 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதனால் உலக நாடுகள் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

More News

கேப்டன்சி தல… தோனி பற்றி மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்கள்!

இந்திய அணிக்காக 3 முறை ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர், இந்தியாவின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நனவாக்கியவர்,

நான் என் அதிர்ஷ்டத்தை கண்டுபிடித்த நாள்: திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தனது திருமண நாள் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய அதிர்ஷ்டத்தை கண்டுபிடித்த நாள்' என்று பதிவு செய்துள்ளார்.

கமல், ரஜினியுடன் நடித்த மாதவியின் 3 மகள்கள்: வைரல் புகைப்படம்!

கமல் ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை மாதவியின் மூன்று மகள்களின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

பாலியல் தொல்லை....!திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் கைது...!

தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பிஷப் கல்லூரி பேராசிரியர், பால் சந்திரமோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரே டீமில் 7 பேருக்கு கொரோனா… ஒரே இரவில் புது அணியை உருவாக்கிய அதிசயம்!

இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வெற்றிக் கோப்பையை சுமந்து கொண்டு சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளது