அம்பானி மருமகளுக்காக சென்னையில் தயாராகும் பல லட்சங்கள் மதிப்பு முகூர்த்த புடவை   

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தா அவர்களின் மகள் ஸ்லோகோ மேத்தா என்பவரை வரும் டிசம்பரில் திருமணம் செய்ய போகிறார் என்பது தெரிந்ததே. இந்தியாவே அசந்து போகும் அளவிற்கு நடைபெறவுள்ள இந்த திருமணத்தின் ஆரம்பகட்ட பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மணமகள் ஸ்லோகோ மேத்தாவின் முகூர்த்த புடவை குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.

மணமகள் ஸ்லோகோ மேத்தாவின் முகூர்த்த புடவை முழுக்க முழுக்க சுத்தமான தங்கம் மற்றும் நவரத்தின தங்கத்தால் ஆன எம்பிராய்டரில் தயாராகி வருவதாகவும், இந்த சேலைக்காக கடந்த ஒரு வருடமாக 36 நெசவாளர்கள் மிகவும் நுணுக்கமாக நெய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் தயாராகி வரும் இந்த சேலையின் மொத்த எடை சுமார் 8 கிலோ என்றும், இந்த சேலைக்கக மேட்ச்சாக ஜொலிக்கும் வைரங்கள் பதித்த ஜாக்கெட் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த முகூர்த்த சேலையின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என்பதும் ஒரு ஆச்சரியமான தகவல். முகூர்த்த புடவையின் மதிப்பே ரூ.50 லட்சம் எனில் இன்னும் திருமணத்தில் என்னென்ன பிரமாண்டங்கள் இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

ரெட்லைட் ஏரியாவுக்காக குரல் கொடுத்த ஸ்ரீரெட்டி

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. அவரது ஸ்ரீலீக்ஸ் பட்டியலில் அடுத்து சிக்க போவது யார்? என்பதை நினைத்து தெலுங்கு திரையுலகமே

சாய்பல்லவி படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான 'பிரேமம்' படம் மூலம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி.

விஷால்-சிம்பு திடீர் சந்திப்பு! முக்கிய ஆலோசனை

2016ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின்போது எதிரும் புதிருமாக இருந்தவர்கள் விஷால் மற்றும் சிம்பு. மேலும் சமீபத்தில் சிம்புவுக்கு ரெட் கார்ட் போட விஷால் முயற்சித்ததாகவும் வதந்திகள் வெளிவந்தன.

மகாராஷ்டிராவிலும் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்

புனே மைதானத்தை இந்த சீசனின் 'ஹோம்' கிரவுண்டாக ஏற்றுக்கொண்டாலும், ஐபிஎல்

முடிவடையும் நிலையில் பிரியா பவானிசங்கரின் அடுத்த படம்

பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து கொண்டிருந்த நடிகை பிரியா பவானிசங்கர், நேற்று வெளியான 'மெர்க்குரி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.