ரூ.100 அபாரதம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 100ஐ தாண்டியதால் சென்னையில் மொத்தம் 906 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தமிழக சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே போவதற்கு சென்னை மக்கள் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்காத தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஊரடங்கு நேரத்தில் காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரியும் நபர்களும் சென்னையில் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை கடுமையாக்க சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்து சென்னையில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டுமன்றி 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

மேலும் விதிகளை மீறி செயல்படும் கடைகள் நிறுவனங்கள் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுத்து ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல் செய்தால் மட்டுமே சென்னையில் கொரோனா வைரசின் தாக்கம் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்! அஜித்துக்கு பிரபல நடிகை வாழ்த்து

சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் மோதுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் எல்லை மீறியபோது

தொழிலாளர் தினத்தில் கமல் வெளியிட்ட சின்னம்: இணையத்தில் வைரல்

இன்று மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் காலையிலேயே தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில்

உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா? கஸ்தூரியின் பதிலடியால் அதிர்ச்சியில் ரசிகர்

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருப்பதால்  மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில்

தமிழகத்தில் முதல்முறையாக 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு: மிக ஆபத்தான நிலையில் சென்னை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி பட இயக்குனரின் 'மே தின வாழ்த்து செய்தி'

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை', 'பூலோகம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'லாபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்