கொரோனா கண்காணிப்பில் இருந்த 5 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் திடீரென தப்பிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் சுமார் 85 பேர்களுக்கு பரவி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த 5 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற நான்கு பேருக்கு இன்னும் ரத்த மாதிரியின் முடிவுகள் வரவில்லை.

இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பேர்களும் மருத்துவமனையில் இருந்து தப்பி, தலைமறைவாகி விட்டதால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் தப்பியோடியவர்களின் முகவரிக்கு காவலர்கள் சென்று அவர்கள் அங்கு இருப்பதை அறிந்து மீண்டும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனை முடிவதற்குள் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த ஐவர் தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இதுவரை கொரோனா!!! 

கொரோனா நோய் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி  வுஹான் மாகாணத்தில் இருந்து பரவியது.

கொரோனா பெயரை சொல்லி பேருந்து டிரைவரை பயமுறுத்திய கல்லூரி மாணவி: சென்னையில் பரபரப்பு

பேருந்து டிரைவரிடம் உடனடியாக பேருந்து நிறுத்தும்படியும், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி பயமுறுத்திய கல்லூரி மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனாவால் பலியான இரண்டாவது இந்தியர்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் பரவியது வருவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

பைத்தியக்காரன், மடையன், முட்டாள்: இயக்குனர் பேரரசு குறிப்பிடுவது யாரை?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகவும் விவாதமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது

5 லட்ச ரூபாய் கொடுத்தால் ரஜினி குறித்து கருத்து கூறுவேன்: பிரபல நடிகர் நிபந்தனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும், தனது அரசியல் கட்சி எப்படி செயல்படும் குறித்தும்,