கொரோனா நோயாளி தப்பியதால் சென்னை மருத்துவமனையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 வயது இளைஞர் ஒருவர், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இதனை அடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் தப்பி ஓடிய கொரோனா நோயாளியை தேடி வருகின்றனர்

மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை செய்தபோது தப்பி ஓடிய இளைஞர் மருத்துவமனையில் உண்மையான வீட்டு முகவரியை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கோயம்பேடு தொடர்புடையவர்களால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது கோயம்பேடு தொடர்புடைய கொரோனா நோயாளி ஒருவர் தப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனே செயல்படுத்திய கேரள முதல்வர்!

திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் பாரதிராஜா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா குறித்து அதர்வா கூறிய கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்பு ஆகியவற்றை பாராட்டாதவர்களே தென்னிந்தியாவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததே.

இந்தியாவில் மே 17 க்குப் பிறகு என்ன நடக்கும்???

இந்தியாவில் நிலவும் சூழலைப் பொறுத்து இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு (மே 17) க்குப்பின் மீண்டும் தொடருவதற்கு வாய்ப்பு இல்லை என்று Economics Times செய்தி வெளியிட்டு இருக்கிறது

H-1B விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா அரசு முடிவு!!!

அமெரிக்காவில் கொரோனா பரவல் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.