பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கு கொரோனா: அண்டை மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி!

தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் 10ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.

குறிப்பாக நவம்பர் 9ம் தேதி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்குப் பின்னரே நவம்பர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் அம்மாநிலத்தில் 150 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் பள்ளிகள் திறந்த மூன்று நாட்களில் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது தாமதமாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 

More News

அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த இந்தியனும் உதவக்கூடாது: தற்கொலை செய்த பொறியாளரின் மகள்!

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரது கைதுக்கு பத்திரிகை துறையினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

பிரியமானவருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த முத்தம்: வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

சம்யுக்தாவை கதறி அழ வைத்த பிக்பாஸ்: செண்டிமெண்ட் ஆரம்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினரையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பியும், நேரில் வரவழைத்தும் சென்டிமெண்ட் காட்சிகள் ஆரம்பமாவது உண்டு.

பைக்கில் வந்த அஜித்: கரவொலி எழுப்பி வரவேற்ற 'வலிமை' படக்குழு!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீண்டும் ஒரு ஆழ்துளை துயர சம்பவம்: 3 வயது குழந்தையின் நிலை என்ன?

தமிழகத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆள்துளை கிணற்றில் கடந்த ஆண்டு விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பதும் அதன் பின்னராவது