கொரோனா அச்சம்: வாரணாசி கோவிலில் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்ட முகக்கவசம்!!!

 

கொரோனா பற்றிய அச்சம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. தற்போது, புகழ்பெற்ற வாரணாசி சிவன் தலத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் அர்ச்சகர் ஒருவர் முகக் கவசத்தை அணிவித்து உள்ளார். இது தொடர்பாக கருத்துக் கூறிய அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விஸ்வநாதர் சிலைக்கும் முகக்கவசம் அணிவித்துள்ளோம்” எனத் தெரிவித்து உள்ளார்.

புகழ் பெற்ற வாரணாசி சிவன் தலத்தில் குளிர் காலத்தில் சிலைகளுக்கு துணிகள் அணிவிக்கப் படுகின்றன. அதே போல வெயில் காலங்களில் ஏசி மற்றும் மின்விசிறி பயன்படுத்தப் படுகின்றன. கொரோனா அச்சம் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில் வாரணாசி கோயிலில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் முகக்கவசம் அணிவிக்க பட்டு இருக்கிறது.

இது குறித்து அர்ச்சகர் கூறும்போது, “சிலைகளைப் பொது மக்கள் யாரும் தொடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளோம். ஒருவேளை பொது மக்கள் சிலைகளைத் தொடும்போது, வைரஸ் மற்றவர்களுக்கும் பரவிவிடும்” எனத் தெரிவித்து இருக்கிறார். வாரணாசி கோவிலில் ஸ்வாமி தரிசம் செய்யும் பக்தர்களும் முகக்கவசத்தை அணிந்தபடியே தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

பாடாய் படுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலா??? 

இந்தியாவில் கொரோனா தொற்று 42 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை

ஒரே வருடத்தில் ஆறு படங்களை ரிலீஸ் செய்யும் சந்தானம்? 

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம் ஒரே வருடத்தில் 10 முதல் 15  படங்களுக்கு மேல் நடித்து வந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் நடித்த படங்கள் ரிலீசாகி வந்தன

மீண்டும் வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த 'சயிர நரசிம்ம ரெட்டி' என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கமலஹாசன் நடிக்கும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும்

CAA சட்டத்திற்கான விவாதத்தில் தெலுங்கானா முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?!

இது போன்ற சட்டங்கள் எரிச்சலை வரவைக்கின்றன. இதனால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் குறைகிறது.