'குக் வித் கோமாளி' சீசன் 3 வைல்ட் கார்ட் வெற்றியாளர்கள் இந்த இருவர் தான்!

’குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் கடந்த வாரம் வைல்ட்கார்டு போட்டியாளர்களில் இருவர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியிலில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் மனோபாலா மற்றும் அந்தோணி தாஸ் தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர். கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப், ரோஷினி, ராகுல் தாத்தா மற்றும் சுட்டி அரவிந்த் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வைல்ட்கார்டில் கலந்து கொண்ட நிலையில் இவர்களில் இரண்டு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் சந்தோஷ் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு ஸ்ருதி, அம்மு அபிராமி, தர்ஷன் மற்றும் வித்யுலேகா ஆகியோர் தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்த 6 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பதால், இறுதிப் போட்டியில் சிறப்பாக சமையல் செய்து டைட்டில் வெல்லும் போட்டியாளர் யார் என்பதை அடுத்த ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம். இருப்பினும் சமூக வலைதளங்களில் கசிந்த தகவலின்படி வித்யூலேகா தான் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது.

More News

கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகைக்கு இரட்டை குழந்தையா?

பிரபல நடிகை ஆலியா பட் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் ஒற்றை தலைமை விஜய் தான்: ஜெயகுமாரின் மகன் இன்னும் என்னென்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சினிமாவில் விஜய்யை அவரது ரசிகர்கள் ஒற்றை தலைமையாக பார்க்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்

'புஷ்பா 2' வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியின் சம்பளம் இத்தனை கோடியா?

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க 10 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் அதை விட இருமடங்கு 'புஷ்பா 2' படத்தில் வில்லனாக நடிக்க வாங்கியுள்ளதாக கூறப்படுவதால் பெரும்

சினிமாவை நிறுத்துவது தான் உளவுத்துறையின் வேலையா? எச்.ராஜா கண்டனம்

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை திரையிடக் கூடாது என உளவுத்துறை அதிகாரி ஒருவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படும்

ஜெய்-அதுல்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பல பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ஜெய், அதுல்யா ரவி நடித்த திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.