இயக்குனரும் வெளியேறி விட்டார்.. இனி 'குக் வித் கோமாளி' அவ்வளவு தானா?

  • IndiaGlitz, [Monday,March 04 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சிக்கு வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான்கு சீசன்களும் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் அறிவித்தனர். இதனை அடுத்து தயாரிப்பாளர் ரவூஃபாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சில குட்பை சொல்வது ரொம்பவே கடினம், ஆனால் அதே நேரத்தில் மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல, நான்கு சீசன்களும் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பயணித்த நினைவுகள் எனது நெஞ்சில் எப்போதும் இருக்கும்.

உங்கள் அனைவரின் அன்பு, ஆசிர்வாதத்திர்கு மிகவும் நன்றி. என்றைக்கும் உங்கள் நன்றி உடையவனாக இருப்பேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர்கள் ஆகியோர் விலகி விட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி இனி அவ்வளவுதானா? என்ற கேள்வி வருத்தத்துடன் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More News

வெட்கக்கேடு!  இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.. பிரபல நடிகை ஆவேசம்..

வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டு பெண்களை நடத்துவது போல வெளிநாட்டவர்களை நடத்தி வரும் நிலையில் ஒரு சிலரால் இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது

பார்லரை வித்தத ஏன் சொல்லலை.. ரோகிணியிடம் முத்து கேட்காத கேள்வியை கேட்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து தனது நண்பர்களுக்காக காரை விற்ற நிலையில் அந்த காரை ஏன் விற்றாய் என ரோகிணி, மனோஜ், விஜயா என மாறி மாறி கேட்க முத்து திருப்பி

ஐஸ்கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. 'தெறி' நடிகையின் வைரல் வீடியோ..!

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஐஸ் கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

வெள்ளம் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்த ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் அதன் பிறகு சில நாட்கள் கழித்து தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மஞ்சுமெல் பாய்சுக்கு கிடைத்த ஆதரவு எனக்கு கிடைக்கலையே.. அதே நாளில் ரிலீசான படத்தின் இயக்குநர் ஆதங்கம்!

மலையாளத் திரைப்படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.