ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்: காங்கிரஸ் எம்பி அதிரடி கருத்து

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாகவும் விரைவில் அவர் தனது ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று இன்னும் ஒருசிலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக் தாக்கூர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஜினி ஒரு நல்ல நடிகர், அவருக்குப் பல ரசிகர்கள் இருக்கிறோம். அவர் அரசியலுக்கு வர மாட்டார் என நினைக்கிறேன். அரசியலில் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தான் செய்து வருகிறார். ரஜினி அர்ஜுன் சம்பத் போன்றவர்களுடன் இணைந்து பேசிக்கொண்டிருப்பது நாகரிகமாக இல்லை.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சுப்பிரமணியசாமி கூறிய கருத்து கேவலமானது. அரசியல் அனைவருக்குமானது. யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் பாராட்டப்பட வேண்டும். இதில் மதத்தையோ, சாதியையோ கொண்டுவருவது கேவலமானது. ரஜினி அரசியலுக்கு வந்தால் முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்கிற நிலைப்பாடு வரவேற்கத்தக்கது’ என்று கூறினார்.

More News

5 மொழி திரைப்படத்தில் ப்ரியா பவானிசங்கரை அடுத்து இணைந்த பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது

டியர் மோடி.. என்னைக் கொண்டாட வேண்டாம்..! பிரதமரின் மகளிர் தின மரியாதையை நிராகரித்த சிறுமி.

என்னுடைய குரலைக் கேட்க தயாராய் இல்லாததால் நீங்ககள் தரும் இந்த மரியாதை எனக்கு வேண்டாம். உங்களுக்கு நன்றி.

"இவர் தான் லிட்டில் சச்சின்"..! பந்து வீசி, வியந்த பிரட் லீ... வீடியோ.

தானீஷா சென்னிடம் அவருக்கு பிடித்த ஷாட் என்ன என்று கேட்ட போது கவர் டிரைவ் எனக் கூறுகிறார். இந்தியா கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தனக்கு பிடித்த வீராங்கனை என்றும் கூறினார்.

பெண் எனும் மகா சக்தி; இந்தியாவில் பெண்களின் சமத்துவம்; சர்வதேச மகளிர் தினம்

"பெண்கள் எல்லாம் முன்னேறிவிட்டார்கள்!!! பெண் அடிமைத் தனம் என்பது அறவே இல்லை" என்று பொதுவாகச் சொல்லப்படுவதும் உண்டு.

"எப்போடா கல்யாணம்"..?! என, அடிக்கடி கேட்டவரை போட்டுத்தள்ளிய 90's கிட்..!

எப்போது கல்யாணம் செய்யப் போகிறாய்..?! என கேட்ட பக்கத்து வீட்டு பெண்ணை இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.