close
Choose your channels

போலி Hand Sanitizer பறிமுதல்!!! ஹரியாணா மாநில அதிகாரிகள் நடவடிக்கை!!!

Saturday, March 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போலி Hand Sanitizer பறிமுதல்!!! ஹரியாணா மாநில அதிகாரிகள் நடவடிக்கை!!!


இந்தியாவில் கொரோனாவில் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், 2 உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு இருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

கொரேனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்ட தொற்று நோய். எனவே இதன் பரவலில் இருந்து தப்பித்துக் கொள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு உலக சுகாதார நிறுவனம் முதற்கொண்டு அனைத்து நாடுகளும் தங்களது பொது மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

கொரானாவிற்கு முதல் தடுப்பு நடிவடிக்கையாக கைகளை சுத்தமாக வைக்கமாறு மருத்துவர்கள் முதற்கொண்டு அனைவரும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். கைகள் மூலம் பரவும் கிருமிகள் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் கிருமிநாசினி பொருட்களைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

இதனால், உலகம் முழுவதும் Hand wash, Hand Sanitizer போன்ற மருத்துவ கிருமிநாசினி பொருட்களுக்கும் Toilet papers, Wed tissue papers போன்றவற்றிற்கான தட்டுப் பாடுகள் நிலவிவரும் சூழலில் இந்தியாவிலும் இந்தப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது.

இந்தத் தேவையைப் பயன்படுத்திக் கொண்டு பல பதுக்கல் நடவடிக்கைகளும் தற்போது தொடருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது ஹரியாணா மாநிலம், குருகிராமில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று போலியான Hand Sanitizer தயாரித்து மக்களிடம் விற்று வந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்து சுமார் 5,000 Sanitizer பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக Hand Sanitizer போன்ற பொருட்களை மக்கள் வீட்டிலே தயார் செய்து பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர். காரணம் முறையான அளவில் சேர்க்கப் பட்ட ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி பொருட்களை வீட்டில் வைத்து தயார் செய்ய முடியாது, அவ்வாறு செய்யப் பட்ட பொருட்கள் நோய் தடுப்பில் இருந்து மக்களை காப்பாற்றுமா? என்பதே சந்தேகம் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் போலி கிருமிநாசினி பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டு இருப்பது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment