பிசிசிஐயின் புது டிரிக்… சென்னை டெஸ்ட் மேட்சில் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது அங்கு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு சமூக இடைவெளியோடு அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தற்போது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து உடனான கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டு இருந்த அறிவிப்பில் முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்திற்கான கொரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50% ரசிகர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு குறிப்பிட்டு இருக்கிறது.

இதையடுத்து சென்னையில் நடைபெற உள்ள 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு 50% பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இரண்டும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் மொத்த இருக்கையான 30 ஆயிரத்தில் இருந்து பாதி அளவான 15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப் படலாம் என்றும் இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரைவில் அறிவிக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை உறுதியாக பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் மட்டுமே இடம் பெறுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.

More News

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த ரிஹானவை 'முட்டாள்' என கூறிய இந்திய நடிகை

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரிஹானாவை 'முட்டாள்'

இன்று முதல் இசைஞானியின் புது ஸ்டுடியோ: முதல் பாடல் யாருக்கு தெரியுமா?

இசைஞானி இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு ஸ்டூடியோ அமைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென

'மாநாடு' படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்

ராமர் நாட்டில் 93, ராவணன் நாட்டில் 51: சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டை டேக் செய்த தமிழ் நடிகர்!

பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பதிவு செய்த ஒரு டுவிட்டை தமிழ் நடிகர் ஒருவர் டேக் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த 'குக் வித் கோமாளி' புகழ்!

விஜய் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருவது நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்குகளை கோமாளிகள் அட்டகாசம் நகைச்சுவை அம்சத்துடன் இருப்பதால்