சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது ஆபாச விமர்சனம். நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்து மீது குற்றஞ்சாட்டிய நிலையில் அவரையும் அவரது குடும்பத்தினர்களையும் ஒருசிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். அந்த வகையில் நித்தியானந்தா ஆசிரமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வைரமுத்து குறித்து கொச்சையான விமர்சனங்களை வைக்க, அவருடன் இருந்த காவியுடை தரித்த சிறுமிகள் ஆபாச வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா உள்பட பலர் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். உண்மையில் இந்து மதத்தின் எதிரி இவர்கள்தான் என்றும், இவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் கூறினர்

இந்த நிலையில் சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக ஆபாசமாக  விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக நல ஆர்வலர் பியூஷ் மானுஷ் என்பவர் கர்நாடகா மாநில போலீசாருக்கு இமெயில் மூலம் புகார்க்கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் கர்நாடக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

More News

'தானா சேர்ந்த கூட்டம்' டப்பிங் குறித்து சுரேஷ்மேனன் அதிருப்தி

சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூர்யாவை அடுத்து இந்த படத்தில் பாராட்டுக்களை பெற்றவர் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த சுரேஷ்மேனன்

பிரியதர்ஷன் - உதயநிதியின் 'நிமிர்': திரை முன்னோட்டம்

இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்

ஒரே ஆதார் எண்ணில் 9 மொபைல் போன்கள் இணைப்பு! அதிர்ச்சி தகவல்

ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அந்த தகவல்கள் பலவிதமாக கசிவதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்

'தளபதி 62' படத்தில் இணைந்த கமல்-ரஜினி படங்களின் பிரபலம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.

ரஜினி, கமலை அடுத்து தீவிர அரசியலில் குதித்த இன்னொரு நடிகர்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதித்துள்ளனர். மேலும் இன்னும் ஒருசில நடிகர்களும் அரசியலில் குதித்த தயாராகி வருகின்றனர்.