close
Choose your channels

அஜித்தின் ஈகோ குறித்து பிரபல நடிகர் கூறும் கருத்து

Friday, September 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் ஒரு நல்ல நடிகர் என்பதை விட அவர் ஒரு மனிதத்தன்மை உடையவர், ஈகோ இல்லாதவர், எளிமையானவர் என்ற வகையிலே அவரை பலருக்கு பிடிக்கும். இந்நிலையில் அவரது ஈகோ இல்லாத குணத்தை தான் நேரில் பார்த்ததாக பிரபல குணசித்திர மற்றும் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இயக்குனர் விஜய் இயக்கிய 'கிரீடம்' படத்தில் நடித்த போது என்னை உட்கார வைத்து, அவர் நின்று கொண்டே பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். நீங்கள் நிற்கும்போது நான் எப்படி உட்காருவது என்று நான் கேட்டபோது 'எனக்கு பேக் பெயின்' அதனால் என்னால் உட்கார முடியாது. ஆனால் நீங்கள் உட்காருங்கள் நான் நின்று கொண்டே பேசுகிறேன்' என்று அவர் ஈகோ இல்லாமல் நடந்து கொண்ட விதம் என்னை உணர்ச்சிமயமாக்கிவிட்டது' என்று கூறியுள்ளார்,
அஜித்துடன் எம்.எஸ்.பாஸ்கர், 'அட்டகாசம்', 'வரலாறு', 'திருப்பதி', மற்றும் 'கிரீடம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment