கல்லூரி இறுதியாண்டு தேர்வு… சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

 

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்த தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் ஆன்லைன் மூலமா அல்லது நேரடியாக நடத்தப்படுமா என்பதைக் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் பல மாநில அரசுகள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகள் உட்பட பள்ளித் தேர்வுகளை ரத்துசெய்து உத்தரவிட்டன. இந்நிலையில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு தேர்வுகளையும் ரத்துசெய்யுமாறு பல மாநிலங்களில் கோரிக்கை எழுந்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகளை நடத்தாமல் முடிவுகளை அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்தராது என மறுத்துவிட்டது. அதையடுத்து வருகிற செப்டம்பர் இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்துப் பல்கலைக் கழகங்களும் நடத்தி முடித்திட வேண்டும் என்ற சுற்றறிக்கையையும் வெளியிட்டு இருந்தது.

UGC யின் முடிவை எதிர்த்து பல மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தனர். அந்த மனுவில் கல்லூரி, பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். மேலும் அந்தத் தீர்ப்பில் அனைத்து பல்கலைக் கழகங்களும் இறுதியாண்டு தேர்வினைக் கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் தேர்வுகளை ஒத்தி வைக்கலாம் ஆனால் தேர்வுகளை நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களுக்கு தேர்வுமுடிவினை அறிவிக்கக்கூடாது எனவும் கூறியிருக்கிறது.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்த தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் ஆன்லைன் மூலமா அல்லது நேரடியாக நடத்தப்படுமா என்பதைக் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறது.

More News

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விலக்கு கோரிய வழக்கு… உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!!!

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சொன்னதை செய்த சூர்யா! கோலிவுட் திரையுலகம் வாழ்த்து

நடிகர் சூர்யா தான் நடித்து தயாரித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொரோனா இருக்கா… வீட்டு தனிமையில் இருந்தால் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி அறிவிப்பு!!!

கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்கத்தை அனுபவித்து வந்தன.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை அடுத்து மீண்டும் இணையும் கார்த்தி-பார்த்திபன்: பரபரப்பு தகவல் 

கடந்த 2011 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்'திரைப்படம் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது என்பது தெரிந்ததே

'மாஸ்டர்' படம் பார்த்தவுடன் தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ் உள்பட பலர் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்