பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் துணிச்சலாக இந்த விவகாரம் குறித்து புகார் கூறியது ஒரே ஒரு பெண் மட்டுமே. அதன்பின்னர் தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாலியல் புகார் கொடுக்கும் பெண்களின் பெயர்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் மீறி கோவை எஸ்பி பாண்டியராஜன், செய்தியாளர் பேட்டியின்போது புகார் அளித்த பெண்ணின் பெயரை கூறினார். அதுமட்டுமின்றி அந்த பெண் படிக்கும் கல்லூரி உள்பட பல விவரங்கள் இணையத்தில் கசிந்தன.

கோவை எஸ்பியின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர், கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

More News

வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக துரைமுருகன் மகன் சென்னை ஐகோர்ட்டில் மனு

வேலூர் மக்களவை தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பிரபுதேவா இயக்கும் அடுத்த படம் இன்று ஆரம்பம்! ஹீரோ யார்?

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் இந்திய திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபுதேவா.

ஆர்.கே.நகரில் மட்டும் ஏப்ரல் 12ல் தேர்தல்!

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆன்மீகப்பழமாக மாறிய அமிதாப்: அருகில் பிரபல தமிழ் நடிகர்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் 'உயர்ந்த மனிதன் 'என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

விஜயகாந்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாம்: நடிகர் ஆனந்த்ராஜ்

உடல்நலமின்றி இருக்கும் விஜயகாந்தை வைத்து அவரது குடும்பத்தினர் அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாம் என நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.