close
Choose your channels

20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ஏல மையம்… விவசாயிகளுக்காக முதல்வரின் புது திட்டம்!

Tuesday, March 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 21 ஆம் தேதி கிருஷ்ணகிரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதியில் விளைகின்ற காய்கறிகள் தான் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இப்படி விளைகின்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அதற்காக அம்மாவின் அரசு ஒசூர் பகுதியில் சர்வதேச ஏலம் மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிக் கொண்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும் கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதியில் விவசாயிகள் மலர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். மலர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் அந்த மலர்களை பெங்களூருவில் சென்று விற்கிறார்கள். இதை சரிசெய்ய ஒசூரிலே சர்வதேச ஏல மையம் அமைய உள்ளது. இனி விவசாயிகள் இந்த மையத்தில் விற்பனை செய்து கொள்ளலாம்.

அதோடு விவசாயிகளின் விளைச்சலை ஊக்கும் விதமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மார்க்கெட் அமைத்து தர இருக்கிறோம். நீங்கள் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை எனத் தெரிவித்தார். மேலும் ஏல மையத்தில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். அந்த கிடங்குகளில் விவசாயிகளின் பொருட்களை வைத்து விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பண்ணை பொது திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. நம் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடியும். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். தக்காளி நடவு செய்யும்போது கிலோ 40 ரூபாய்க்கு விற்கும். விற்பனை செய்யும்போது கிலோ 5 ரூபாய்க்கு வந்துவிடும்.

இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து விடுகிறார். இத்தகைய குறைகளைப் போக்குவதற்காக அதிமுக அரசு ஒசூர் பகுதியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச ஏல மையத்தை அமைக்க உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, ஒசூர் ஒட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை எளிதாக விற்பனை செய்யவும் பதப்படுத்தவும் முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment