நெஞ்சுல கை வச்சா உடனே ஹார்ட் அட்டாக்கா? 'கோப்ரா' இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

நடிகர் சியான் விக்ரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லேசான நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று நடைபெற்ற ‘கோப்ரா’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் தன்னைப் பற்றி பரவிய வதந்தி குறித்து கூலாக பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இந்த விழாவில் பேசியதாவது: சும்மா நெஞ்சில் கை வச்சாலே உடனே ஹார்ட் அட்டாக் என்று சொல்லிவிடுகிறார்கள். எனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன். நான் மருத்துவமனையில் அட்மிட் ஆன போது ஊடகங்களில் என்னென்னவோ எழுதினார்கள். அவற்றை எல்லாம் பார்த்து ரசித்தேன். ஒரு சிலர் என்னுடைய முகத்தை மட்டும் மார்பிங் செய்து வேறு ஒரு நோயாளியின் முகத்தோடு வைத்து போட்டோஷாப் செய்து இருந்ததையும் நான் ரசித்தேன் என்று கூறினார்.

மேலும் நான் இருபது வயதில் விபத்தில் சிக்கியபோது எனது காலை இழக்க வேண்டிய நிலை இருந்தது. அப்படி ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு விட்டேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம், இதெல்லாம் ஒன்றுமே இல்லை. எனது குடும்பத்தினரும் எனது ரசிகர்களும் எனது நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு ஒன்றும் ஆகாது. நான் எப்போதும் சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமாதான் என்னுடைய உயிர் என்று கூறினார்.

மேலும் ’இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசைக்கு நானும் எனது மகன் துருவ்வும் மிகப்பெரிய ரசிகர்கள். நம்மீது நாமே மேல் நம்பிக்கை வைத்து கடுமையாக வேலை செய்தால் எவ்வளவு உயரத்திற்கும் போகலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரகுமான் தான். அவரைப் பார்த்த பிறகுதான் எனக்கு தேசிய விருது, ஆஸ்கர் விருது எல்லாம் வாங்க வேண்டுமென தோன்றியது. இந்த படத்திற்காக ஏழு மொழிகளில் டப்பிங் செய்கிறேன், எனக்கு இயக்குனர் விஜய் தான் மிகப் பெரிய தைரியம் கொடுத்தார்’ என்று கூறினார்.


 

More News

நயன் - விக்கியை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு இருவரும் தேனிலவு சென்று வந்தனர் என்பதும் தெரிந்ததே.

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் கனவுப்படம்: ஹீரோக்கள் இவர்களா?

தமிழ் திரை உலகில் முதல் முதலில் பிரமாண்டத்தை கொண்டு வந்தது இயக்குனர் ஷங்கர்தான் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும்

யாருக்கும் பின்னணி குரல் இல்லை: பொன்னியின் செல்வனில் கமல் செய்தது இதுதான்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன்

கெளரவம்' சிவாஜி பட வசனத்தை ஒரே டேக்கில் நடித்த சூப்பர் ஸ்டார் நடிகர்: வைரல் வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கௌரவம்' திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் அவர் நடித்த ஒரு காட்சியை ஒரே டேக்கில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் நடித்து கைதட்டல் வாங்கியிருக்கும்

ரன்பீர் கபூர் பட புரமோஷனுக்காக மும்பை சென்ற விஜய் டிவி பிரபலங்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'ஷம்ஷீரா' என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில்