close
Choose your channels

'தங்கலான்' படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால்.. வெற்றி விழாவில் விக்ரம் பேச்சு..!

Saturday, August 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தங்கலான்’ படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்காக இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் விழாவில் சியான் விக்ரம் தெரிவித்தார்.

சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தின விருந்தாக திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் 26.44 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்ரம் ’தங்கலான்’ படத்தை 100 பாகங்கள் கூட எடுக்க முடியும், ஆனால் உங்களுக்கு இந்த படம் பிடித்திருப்பதால், நீங்கள் காட்டும் அன்புக்காக, இரண்டாம் பாகத்தை உருவாக்க நாங்கள் ஆசைப்பட்டோம்.

இதுகுறித்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரிடம் கலந்து உரையாடியுள்ளேன், ரஞ்சித் தனது அடுத்த பட வேலையை முடித்துவிட்டு ’தங்கலான் 2’ படத்திற்காக அழைத்தால் உடனே சென்று விடுவேன்’ என்று விக்ரம் கூறியுள்ளார். இதனை அடுத்து ’தங்கலான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment