பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த கமல்ஹாசன் திரைப்படம்

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

வரும் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இரண்டுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இரண்டு படங்களும் வெற்றி பெற்றி நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் பொங்கல், தலைவர், தல ரசிகர்களுக்கு மட்டுமின்றி சீயான் விக்ரம் ரசிகர்களுக்குமான பொங்கலாக மாறியுள்ளது.

சீயான் விக்ரமின் 56ஆவது படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஸ்ரீனிவாஸ் குத்தா ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் பிரேம் நவாஸ் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

வங்கிக்கணக்கு முடக்கம் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வங்கிக்கணக்கை நேற்று ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியதாகவும், அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

பிரமாண்ட இயக்குனரின் மகன் திருமண நிகழ்ச்சியில் அனுஷ்கா

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி ' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

அமெரிக்காவில் புது உற்சாகத்துடன் கேப்டன்: வைரலாகும் புகைப்படங்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும்,

தமிழகம் எனக்கு செய்த உதவி: சென்னை விழாவில் தல தோனி பேச்சு

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எழுதிய 'காபி டேபிள் என்ற' புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

குழந்தை பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மரண தண்டனையை உலகின் பல நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை அமலில் உள்ளது.