மகள் மரணத்தில் சந்தேகம்: சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலையில் சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சித்ராவுக்கு ஹேமந்த் என்பவருடன் இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருப்பதாக முதலில் செய்தி வந்தது. ஆனால் தற்போது வந்துள்ள செய்தியின்படி இரண்டு மாதங்களுக்கு முன் ஹேமந்த், சித்ரா ஆகிய இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் சித்ரா தற்கொலை செய்தபோது ஹேமந்த் அதே அறையில் இருந்ததால் கணவர் என்ற முறையில் அவரிடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் இது குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

பாலாஜியை பழிவாங்க அர்ச்சனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள்.

'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திடீரென டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் ஆகும் பிரதமர்… காரணம் தெரியுமா???

நேற்று முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

சாதி வாரியான கணக்கெடுப்புக்கு புதிய ஆணையம்… பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு!!!

தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ

தனுஷ் படத்தில் பாடல் பாடிய தந்தை நடிகர்!

தனுஷ் நடித்த படத்தில் தந்தையாக நடித்த நடிகர் ஒருவர் தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார்