உங்களை அடித்தால் பிரச்சனை வரும்: திடீரென பின்வாங்கிய சிரஞ்சீவி!

வில்லன் நடிகர்களை ஹீரோ புரட்டி எடுக்கும் வகையில் காட்சிகள் அமைப்பதுதான் காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது திடீரென வில்லன் நடிகரை முன்னணி நடிகரான சிரஞ்சீவி அடிக்கத் தயங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் ’ஆச்சார்யா’. கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய வில்லனாக சோனுசூட் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவி மற்றும் சோனு சூட் மோதும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது சோனுசூட்டை காலால் உதைக்க வேண்டிய காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளவர் சோனுசூட். அவருக்கு தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அப்படி ஒரு இமேஜை பெற்றுள்ள அவரை நான் காலால் அடித்தால் அவரது ரசிகர்கள் என்னை திட்டுவார்கள், அது மட்டுமின்றி ரசிகர்கள் என்னை வெறுக்கவும் செய்வார்கள் என்று கூறி சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த காட்சியை வேறு விதமாக மாற்றி இயக்குனர் படமாக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் டோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அர்ப விஷயத்துக்காக… கேப்டனையே பொது இடத்தில் சுட்டுக் கொன்ற பயங்கரம்!!!

தென் கொரியா கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் படு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது.

விக்னேஷ்சிவன் - நயன்தாரா கண்டெடுத்த 'கூழாங்கல்'!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதும்

ஆளுக்கொரு விதியா? கேப்டன் கோலி குறித்து முன்னாள் வீரரின் பாய்ச்சல்!!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அர்ச்சனாவிடம் அனிதா ரகசியமாக பேசியது என்ன? ஆரி சொல்ல வந்தது இதைத்தானா? கசிந்த வீடியோ!

நேற்றைய டாஸ்க் ஒன்றில் ஷிவானி ஆரியிடம் டிமோட்டிவேஷன் குறித்த ஒரு கேள்வி கேட்டபோது, அனிதா குறித்தும் அவரது கணவர் மற்றும் பெற்றோர் குறித்தும் ஆரி பேசிக் கொண்டிருந்தார்.

பாலின சிக்கலின் உச்சக்கட்டம்… மனதை உருக்கும் சம்பவம்!!!

பாகிஸ்தானில் பிறந்த 2 சகோதரிகள் பாலின பிறப்புறுப்பு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, கடும் சிரமத்திற்கு இடையே ஆணாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.