சூர்யா 37: அல்லு சிரிஷூகு பதில் ஒப்பந்தமான பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

நடிகர் சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, அல்லுசிரிஷ் உள்பட பல நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேறொரு படத்திற்கு கொடுத்த கால்ஷீட் காரணமாக அல்லுசிரிஷ் 'சூர்யா 37' படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே அல்லுசிரிஷூகு பதில் வேறொரு நடிகரை தேர்வு செயும் பணியில் கடந்த சில நாட்களாக இயக்குனர் கேவி ஆனந்த் ஈடுபட்டிருந்தார்

இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் சிராஜ் ஜானி என்பவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிராஜ் ஜானி பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

படப்பிடிப்பின்போது அமலாபால் காயம்: படப்பிடிப்பு ரத்து

நயன்தாரா, த்ரிஷா போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை அமலாபால் 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபாலுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு.

விஜய்யை அடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்

கருணாநிதியின் மறைவின்போது அமெரிக்காவில் 'சர்கார்' படப்பிடிப்பில் இருந்த தளபதி விஜய், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

விஜய், அஜித் குறித்த ஸ்ரீரெட்டியின் கமெண்ட்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றவர் என்பது தெரிந்ததே

நடிகை ரம்பாவுக்கு  வளைகாப்பு திருவிழா

பிரபல நடிகை ரம்பாவுக்கும் கனடா தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

'சுப்பிரமணியபுரம்' நடிகையின் திருமண தேதி அறிவிப்பு

சசிகுமார், ஜெய் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி.