நான் ரொம்ப டயர்டு ஆகிவிட்டேன், என்னால முடியலை: ராதாரவி குறித்து சின்மயி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியதாக அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ராதாரவி பாஜகவில் இணைந்துள்ளார் என்பதும் பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் மற்றும் புதுவையில் அவர் தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ராதாரவி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நயன்தாரா குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? என்றும் உதயநிதிக்கும் அவருக்கும் என்ன உறவு என்றும் கேள்வி எழுப்பி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டரில் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘இந்த மனிதராலும் இவருடைய பேச்சாலும் நான் உண்மையிலேயே ரொம்ப டயர்ட் ஆகி விட்டேன். என்னால் இதற்கு மேல் முடியவில்லை. வெளிப்படையாகவே இவர் ஆபாசமாக பேசுகிறார். இவரை எப்படி அந்த கட்சி நட்சத்திர பேச்சாளராக எடுத்தது என்பது தெரியவில்லை.

ஆ ராசாவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும், எல்லோரும் மோசமாக பேசிவருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்துவிட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். சின்மயி பதிவு செய்த இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தான் பட்ட அவமானத்தை முதல்முறையாக கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி! 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே ஷிவாங்கி ரசிகர்களுக்கு அறிமுகம் என்றாலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்

எனக்கு கிடைத்த விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்‌: ரஜினிகாந்த் நன்றி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று காலை திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிரதமர் மோடி,

சூனியம் வச்சிருக்கேன்....எனக்கு ஓட்டு போடலைனா, கை, கால் வராது....! பயமுறுத்தும் திமுக வேட்பாளர்....!

கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, நாத்திகம்  போன்றவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் திமுக-வில், வேட்பாளர் ஒருவர் மக்களை அச்சுறுத்தும் தோணியில் வாக்கு கேட்டுள்ளார். 

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா… அச்சமூட்டும் பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தலைத்தூக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது.

ஷங்கர் மீது லைகா தொடுத்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'இந்தியன் 2'.