கொரோனா நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனா!!! தக்கப் பதிலடி கொடுத்த இந்தியா!!!

  • IndiaGlitz, [Tuesday,April 21 2020]

 

கொரோனா கோரத் தாண்டவத்தில் இருந்து தற்போது சீனா மீண்டு வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்யாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்து தனது பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் உலகில் மற்ற நாடுகள் கடும் பொருளாதார சரிவினைச் சந்தித்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவினால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு இன்னும் இயல்புநிலைக்கு திரும்பாமல் இருக்கிறது.

இந்நிலையில், பல நாடுகளில் சீனா அந்நிய நேரடி முதலீட்டின் பேரில் அதிக பங்குகளை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் ஹெச்டிஹெஃசியின் பங்குகளை கடந்த வாரத்தில் சீனாவின் மத்திய மக்கள் வங்கி வாங்கியிருக்கிறது. கொரோனா பாதிப்பினால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் முடங்கியிருக்கும்போது நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து தற்போது இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. கடந்த சனிக்கிழமை இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள நாடுகள் இந்தியாவில் முதலீடுகளை வாங்கும்போது மத்திய அரசின் ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும் எனத் தெரிவித்து இருக்கிறது.

இந்தத் திருத்தத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு அதற்கான விளக்கத்தையும் வெளியிட்டு இருக்கிறது. “அந்நிய நேரடி முதலீட்டின் எந்த விதிகளையும் இந்தியா மாற்றவில்லை. கொரோனா பாதிப்பு நேரத்தில் அண்டை நாடுகளின் முதலீடுகளை அனுமதிப்பதற்கு முன்பு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது குறித்து மட்டுமே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது சிறிய நடைமுறை மாற்றம் மட்டுமே. பெரிய அளவில் விதிகளை மாற்றவில்லை” என விளக்கம் அளித்து இந்த விஷயத்தை இந்திய அரசு சாதுர்யமாக சமாளித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா பரவல்: தொடரும் குற்றச்சாட்டுகளுக்கு சீனாவின்  வுஹான் ஆய்வகம் விளக்கம்!!!

கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டன.

அலட்சியத்தால், கொரோனா நோயாளியை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த மருத்துவர்!!!

அலிகார் முஸ்லீம் பல்கழைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட AMU ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷாருக்கான் கேரக்டரில் நடிக்க விரும்பும் தளபதி விஜய்!

தளபதி விஜய் தான் நடித்து வரும் பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களை தவிர்த்துவிடுவார் என்பதும், அவர் மாஸ் ஹீரோ கேரக்டர்களையே விரும்பி நடிப்பார் என்பதும் தெரிந்ததே

ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக ரேபிட் கிட் கருவிகளை சீனாவிலிருந்தும் தென்கொரியாவில் இருந்தும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களும்,

ஊரடங்கு நேரத்தில் மகளுடன் பைக் ரைடிங் செய்த 'தல'

கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி