கடும் பொருளாதார இழப்பை சந்திக்க இருக்கும் சீனா… மீண்டும் பரவும் கொரோனா!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. அதிலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகள் தொடர்ந்து கொரோனா 2, 3 ,4 ஆவது அலையைச் சந்தித்து வந்தன. பின்னர் கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில் தற்போது பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை வாழத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் சாங்சுன் நகரில் கடந்த சில தினங்களாக அதிகளவில் கொரோனா பரவல் ஏற்பட்டு வருவதாகவும் இந்தப் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 225 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து ஜில்லிகன் மாகாணத்தில் இருக்கும் சாங்சுன் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

முக்கியத் தொழில் நகரமான சாங்சுன் நகரில் திடீரென்று கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதற்கான காரணத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் அப்பகுதியில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,194 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் 225 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

மேலும் நேற்றைய தினம் சாங்சுன் நகரில் புதிதாக 1,369 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் ஒட்டுமொத்த உலக நாடுகளிடமும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இதுவரை கொரோனாவால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,3,4 ஆவது அலையை சில நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில் சீனால் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருவது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு அந்நாட்டில் கடும் பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

More News

சமந்தாவை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்து சென்ற பிரபல நடிகர்: வைரல் வீடியோ

நடிகை சமந்தாவை பத்திரிக்கையாளர் மற்றும் போட்டோகிராஃபர்களிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பாக பிரபல நடிகர் ஒருவர் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்: எந்த படத்திற்கு இந்த மாஸ் ஸ்டில்?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள படத்தின் மாஸ் ஸ்டில் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இமயமலை ரிஷிகேஷில் தொழிலதிபரை திருமணம் செய்த பாடகி!

பிரபல பாடகி இமயமலை ரிஷிகேஷ் பகுதியில் பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்: என்ன விசேஷம்?

இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

மஞ்சிமா மோகன் மீதான காதலை உறுதி செய்த கவுதம் கார்த்திக்: எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகள் இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு நட்சத்திர ஜோடியாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாகவும்