கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிரடி காட்டும் முதல்வர்!!! ரேஷன் பொருட்களை வீட்டுக்கே அனுப்ப புதியத் திட்டம்!!!

 

நியாய விலைக்கடைகளில்  வழங்கப்படும் பொருட்களை நேரடியாக பொது மக்களின் வீட்டிற்கே கொண்டுவரும் வகையிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது. இத்திட்டத்தை கொரோனா நேரத்தில் அமல்படுத்துவது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் வகையிலான புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா நேரத்திலும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை, முதலீடு ஈர்ப்பு எனப் பல்வேறு திட்டங்களை சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது புதிய யுக்தியை கையாள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நெரிசலை குறைக்க அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை நடைமுறைக்குக் கொண்டுவர இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விலை இல்லா பொருட்கள் அடுத்த மாதம் முதல் வீடு தேடி வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். இவை ரேஷன் கடைகளை மூடுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் இந்த அதிரடியான திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை களைவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. வேலையில்லாமல் வீட்டில் முடங்கியிருக்கும் இளைஞர்கள் எளிதாக வேலை வாய்ப்புகளை தேடி கண்டுபிடிப்பதற்கு தமிழக அரசின் புதிய இணைய செயலி அறிமுகப் படுத்தப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில எழுத முடியாத கல்லூரி அரியர் தேர்வுகளை தமிழக முதல்வர் ரத்து செய்திருக்கிறார். இதன்மூலம் அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தால் அவர்களுக்கு பாஸ் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. அதேபோல கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ளும் மாநிலமாகவும் தமிழகம் இருந்து வருகிறது. அதைத்தவிர உயர்க்கல்வியில் தமிழக மாணவர்களின் சேர்க்கை விகிதம் இந்திய அளவில் மிக உயர்ந்து சாதனை படைத்த மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைப் பொருட்கள் அடுத்த மாதம் முதல் வீட்டுக்கே கொண்டு வரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இன்னும் இருக்கு… சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த பிளான்!!! என்ன தெரியுமா?

தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கடந்த 2009 முதல் தீவிரம் அடைந்து வருகிறது.

இது தீப்பிடித்த காடு, பறவைகளே! பத்திரம்: ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பேருந்து

உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும்தான் மேட்டரு: செல்வராகவனின் 'கொரோனா' பதிவு

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

கனவுகளுடன் வந்தார், கனவு முடிந்ததும் கிளம்பிவிட்டார்: விஜய்வசந்த் உருக்கமான பதிவு

தனது தந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு பல கனவுகளுடன் வந்தார் என்றும் அவர் தன்னுடைய கனவு அனைத்தையும் நனவானவுடன் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட்டார்

தனி விமானம் மூலம் காதலருடன் கொச்சி சென்ற நயன்தாரா: என்ன காரணம்?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் திடீரென கொச்சி சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது