கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு… காணொலி வாயிலாகத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகளினால் தமிழர்களின் எழுத்தறிவு மற்றும் இருப்புக்கான காலம் கி.மு.4 க்கு முன்னதாக சென்றது. இதனால் கீழடியில் ஆய்வுகளை விரிவுப்படுத்த பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. ஆனால் கீழடியில் 3ஆம் கட்ட ஆய்வுப் பணிகளோடு மத்தியத் தொல்லியல் துறை நிறுத்திக் கொண்டது.

இதையடுத்து கீழடியில் அடுத்தக் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 5 ஆம் கட்ட அகழாய்வில் 750 க்கும் மேற்பட்ட பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மேலும் 6 ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் மட்டும் 3,500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக தெல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் தற்போது 7 ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

நடிகர் நகுல் க்யூட் குழந்தையின் புகைப்படம் வைரல்!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' 'கந்த கோட்டை' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல்

மனைவி, 3 குழந்தைகளுடன் வைரலாகும் ஹரி ஃபேமிலி புகைப்படம்!

தமிழ் சினிமாவில் அதிக ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி என்பது அனைவரும் அறிந்ததே. பிரசாந்த், சிம்ரன் நடித்த 'தமிழ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹரி

'சித்தி 2' சீரியலில் இருந்து ராதிகா விலகியது இதற்குத்தானா?

நடிகை ராதிகா சமீபத்தில் 'சித்தி 2' சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற செய்தியை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'சித்தி 2' என்ற மெகா சீரியல் இருந்து நான் வெளியேறும்

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி… ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ் என்ட்ரி!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வீடு இல்லாத ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள்… முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.