பிரபல நடிகரின் படத்தை பார்த்தவுடன் வரிவிலக்கு அறிவித்த முதலமைச்சர்!

பிரபல நடிகரின் படத்தை பார்த்து அந்த படத்திற்கு முதலமைச்சர் வரிவிலக்கு அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற தமிழ்ப்படத்திலும், ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகர் அக்ஷய்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் ’சாம்ராட் பிரித்விராஜ்’. சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.

250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் அக்ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி ஷில்லார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி என்பவர் இயக்கியுள்ளார் .

இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்தப் படத்தை தனது கேபினட் அமைச்சர்களுடன் பார்த்தார். படம் பார்த்து முடித்தவுடன் படக்குழுவினர்களூக்கு தனது பாராட்டை தெரிவித்ததோடு இந்த படத்திற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தற்பெருமை பேசும் நடிகைகளை எனக்கு பிடிக்காது: ரஜினி பட நாயகி!

தற்பெருமை பேசும் நடிகைகளை எனக்கு பிடிக்காது என ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'விக்ரம்' படத்தின் இடைவேளையில் எந்த படத்தின் டிரைலர் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் முதல் நாளுக்கான அத்தனை காட்சிகளின்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அந்த பணத்தை மட்டும் மகளுக்காக சேமித்து வச்சுருக்கேன்: மிஷ்கின்

பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிப்பதில் இருந்து கிடைக்கும் பணத்தை தனியாக தனது மகளுக்காக சேமித்து வைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்: போலீசில் வாக்குமூலம் கொடுத்த பிரபல நடிகர்!

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் என நடிகை அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசாரிடம் பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.