இந்த கைத்தட்டல் எதுக்கு? சிஎஸ்கேவை குழப்பும் வைரல் வீடியோ!

2021 க்கான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே பல வீரர்கள் நேற்றைய ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே ஒரு வீரரை ஏலம் எடுத்தப்போது ஏலத்தில் இருந்தவர்கள் அனைவரும் நக்கலான சிரிப்பில் ஆரம்பித்து, பின்னர் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நக்கல் சிரிப்பிற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதே தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிஎஸ்கே தொடர்ந்து மூத்த வீரர்களின் மீதே கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மொயின் அலியை 7 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே பின்னர் கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. இது சற்று அதிகமான தொகையாக இருந்தாலும் மிகச்சிறந்த தேர்வுகளாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஏலத்திற்கு வந்த புஜாரா பெயரை சிஎஸ்கே திடீரென தேர்வு செய்தது. இதைச் சற்றும் எதிர்பாராத பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி சிந்தா சிரித்தே விட்டார்.

இப்படி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்த ஏல உரிமையாளர்கள் பின்னர் கைத்தட்டி ஆரவாரம் செய்யவும் ஆரம்பித்தனர். இந்த கைத்தட்டலை ரசிகர்கள் முதலில் கிண்டலாகவே எடுத்துக் கொண்டனர். ஆனால் தற்போது இது கிண்டல் அல்ல, சிஎஸ்கே மூத்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தை கவுரவிக்கவே அந்த கைத்தட்டல் கொடுக்கப்பட்டது என்பதாகத்  தகவல் கூறப்படுகிறது. டெஸ்ட் மேட்சில் கிங்காக கருதப்படும் புஜாராவை சிஎஸ்கே ஒப்பனிங் மாற்று வீரராக பயன்படுத்த இருக்கிறது. இவரின் வருகையால் விக்கெட்டை கட்டுப்படுத்த முடியும் என்ற கணிப்பும் இருந்து வருகிறது.

A round of applause ???? at the @Vivo_India #IPLAuction as @cheteshwar1 is SOLD to @ChennaiIPL. pic.twitter.com/EmdHxdqdTJ

— IndianPremierLeague (@IPL) February 18, 2021

More News

நடிகர் சிவகார்த்திகேயன், யோகிபாபுவுக்கு தமிழக அரசின் முக்கிய விருது: முழு பட்டியல்

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது அளித்து வருகிறது என்பது தெரிந்ததே

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் நாயகி இவரா?

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவிருக்கும்

நீச்சலுடையில் சன் டிவி சீரியல் நடிகை: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் ஆன 'கண்மணி' மூலம் புகழ்பெற்ற நடிகை ஒருவர் தனது நீச்சல் உடை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

அருவியில் ஆனந்தமாக குளிக்கும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை! வைரல் புகைப்படங்கள்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ள நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அருவியில்

ஷாருக்கானையே வாங்கிட்டோம்! வைரலாகும் ப்ரீத்தி சிந்தாவின் க்யூட் ரியாக்ஷன்ஸ்!

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சையத் முஷ்டக் கோப்பை போட்டிக்கான முடிவுகள் பெரிதும் ஆதிக்கம்