close
Choose your channels

ஆபாச சேட்டை செய்த ஆசிரியர்....! தக்க பதிலடி கொடுத்த மாணவர்கள்...!

Monday, May 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக, அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை, கே.கே நகரில் உள்ளது, பி.எஸ்.பி.பி. எனும் (சேஷாத்திரி) தனியார் பள்ளி. இப்பள்ளியில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருபவன் தான் ஆசிரியர் ராஜகோபாலன். தற்போது கணக்குபதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். தன்னுடைய ஆசிரியர்பணியையே கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துள்ளார், தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வெளியில் இதுகுறித்து கூறினால் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பள்ளி டீன் ஷீலா ராஜேந்திரனுக்கு முன்னாள் மாணவர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் மாணவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது,"ஆன்லைன் வகுப்பில் பாடம் நடத்தும் போது, இடுப்பில் மட்டும் துண்டு கட்டிக்கொண்டு வேறு உடையணியாமல் மாணவிகளுக்கு பாடம் நடத்தியுள்ளார் ராஜகோபாலன். பள்ளி திறந்திருந்த சமயங்களிலும், மாணவிகளிடம் அத்துமீறி உடல்ரீதியாக தொட்டுப்பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளியில் புகாரளித்தும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே ராஜகோபாலனை கண்டித்துள்ளது பள்ளி நிர்வாகம். ஆனால் இதை சாதமாக பயன்படுத்தி தன்னுடைய சேட்டைகளை தொடர்ந்த கோபாலன், மீண்டும் புகாரளித்தால் உங்களை தேர்வில் பாஸ் செய்ய விடமாட்டேன் என மிரட்டியுள்ளார்.

மாணவிகளின் வாட்ஸ்அப் நம்பர் அவரிடம் உள்ளதால், அவர்களுக்கு தனித்தனியாக பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். ஆபாச படங்களை அனுப்புவது, இரட்டை அர்த்தத்துடன் பேசுவது, படத்திற்கு போகலாம் என அவர்களை தனியாக அழைப்பது, பெண்களின் உடல் அமைப்புகளை தவறாக சித்தரிப்பது, பாலியல் கமெண்டுகளை கூறுவது என பல சில்மிஷ வேலைகளை செய்து வந்துள்ளான்.

இதனால் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும். குழந்தைகளின் பெயர்கள் வெளியில் தெரியாமல் இருக்க பள்ளி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதை கையாள வேண்டும் என முன்னாள் மாணவர் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்திகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுகுறித்து பாடகி சின்மயி மற்றும் லட்சுமிபிரியா சந்திரலக்ஷ்மி டுவிட் போட்டதால், பலரும் சமூகவலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி திமுக எம்.பி கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment