close
Choose your channels

கடனை வசூலிக்க மனைவியை காதலியாக நடிக்க வைத்தவர் கைது!

Saturday, April 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொடுத்த கடனை வசூல் செய்ய மனைவியை கடன் கொடுத்தவருடன் காதலி போல் பழகவிட்டு கடன்காரரை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போரூரை சேர்ந்த நந்தகுமார் என்பவர் சதிஷ்குமார் என்பவருக்கு ரூ.34 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். கடனை பலமுறை திருப்பி கேட்டும் சதீஷ்குமார் தரவில்லை. ஒருகட்டத்தில் நந்தகுமாரின் போனையும் சதீஷ்குமார் எடுப்பதில்லை.

இதனையடுத்து நந்தகுமாரும் அவருடைய சகோதரர் அஜித்குமாரும் சதீஷ்குமாரை கடத்த திட்டமிட்டனர். இதற்காக அஜித்குமாரின் மனைவி இந்துமதியை வாட்ஸ் மூலம் சதீஷ்குமாருடன் பழகவிட்டனர். இந்துமதியும் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் மூலம் காதல் வலை வீச, ஒரு கட்டத்தில் இந்துமதியை சந்திக்க சதீஷ்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்பார்த்து காத்திருந்த நந்தகுமாரும் அவருடைய சகோதரர் அஜித்குமாரும் சதீஷ்குமாரை இந்துமதி மூலம் போரூரில் உள்ள ஒரு இடத்திற்கு வரவழைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை வேலூருக்கு கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வேலூர் சென்று சதீஷ்குமாரை மீட்டதோடு, நந்தகுமார், அஜித்குமார் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான இந்துமதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment