கடனை வசூலிக்க மனைவியை காதலியாக நடிக்க வைத்தவர் கைது!

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

கொடுத்த கடனை வசூல் செய்ய மனைவியை கடன் கொடுத்தவருடன் காதலி போல் பழகவிட்டு கடன்காரரை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போரூரை சேர்ந்த நந்தகுமார் என்பவர் சதிஷ்குமார் என்பவருக்கு ரூ.34 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். கடனை பலமுறை திருப்பி கேட்டும் சதீஷ்குமார் தரவில்லை. ஒருகட்டத்தில் நந்தகுமாரின் போனையும் சதீஷ்குமார் எடுப்பதில்லை.

இதனையடுத்து நந்தகுமாரும் அவருடைய சகோதரர் அஜித்குமாரும் சதீஷ்குமாரை கடத்த திட்டமிட்டனர். இதற்காக அஜித்குமாரின் மனைவி இந்துமதியை வாட்ஸ் மூலம் சதீஷ்குமாருடன் பழகவிட்டனர். இந்துமதியும் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் மூலம் காதல் வலை வீச, ஒரு கட்டத்தில் இந்துமதியை சந்திக்க சதீஷ்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்பார்த்து காத்திருந்த நந்தகுமாரும் அவருடைய சகோதரர் அஜித்குமாரும் சதீஷ்குமாரை இந்துமதி மூலம் போரூரில் உள்ள ஒரு இடத்திற்கு வரவழைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை வேலூருக்கு கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வேலூர் சென்று சதீஷ்குமாரை மீட்டதோடு, நந்தகுமார், அஜித்குமார் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான இந்துமதியை போலீசார் தேடி வருகின்றனர்.

More News

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி என தகவல்

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கிய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

விஜய்சேதுபதியின் படத்தில் அறிமுகமாகும் இயக்குனரின் மகன்!

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'மாமனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு வித்தியாசமான விவசாயி வேடம்: விவேக் திட்டம்

காமெடி நடிகரான விவேக் சமீபத்தில் சீரியஸான கேரக்டரில் நடித்த 'வெள்ளைப்பூக்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒரு படத்தை இயக்கும் திட்டம் ஒன்றை விவேக் வைத்துள்ளார்.

போலீஸ் புகார் வேண்டாம், பொறுமையை கடைபிடியுங்கள்: ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

ராகவா லாரன்ஸ் குறித்து ஒருசிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், அவர்கள் மீது ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் போலீஸ் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கிரவுண்டுக்குள்ள இறங்கிட்டா எல்லாத்தையும் மறந்துடுவாங்க: மனம் திறக்கும் கோமதியின் தோழி

தங்கமங்கை கோமதி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்து நாட்டிற்கே பெருமை சேர்த்த நிலையில் கோமதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருவது தெரிந்ததே