சென்னை - கொல்கத்தா போட்டியின் சில சுவாரஸ்யங்கள்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.  பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் சில சுவாரஸ்யங்கள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்

* சென்னை அணியின் கேப்டன் தோனியும், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர்கள்

* தோனி, தினேஷ் கார்த்திக் இருவரும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் பிரியமானவர்கள்

* இந்த போட்டியில் மொத்தம் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதிக சிக்ஸர் அடித்த ஐபிஎல் போட்டியை சமன் செய்தது இந்த போட்டி. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தது.

* சிஎஸ்கே சேஸ் செய்த 2வது பெரிய ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 206 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றதே சிஎஸ்கே அணியின் அதிகபட்ச சேஸ் ஆகும். மேலும் இந்த இரண்டு போட்டியும் சென்னை மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

* ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை(!) வினய்குமார் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 19 ரன்களை டிண்டாவும், 16 ரன்களை பிராவோவும், 13 ரன்களை ஃபால்க்னர், நெஹ்ரா, மோகித் ஷர்மா ஆகியோர்களும் கொடுத்துள்ளனர்

* நேற்றைய போட்டியில் வினய்குமார் வீசிய கடைசி பந்தை சிக்சராக்கி வின்னிங் ஷாட் அடித்ததார் ஜடேஜா.

கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை மற்றும் பெங்களூர் அணி இடையிலான போட்டியிலும் வினய்குமார் வீசிய கடைசி பந்தை பவுண்டரியாக விளாசி வின்னிங் ஷாட் அடித்ததும் இதே ஜடேஜாதான். 
 

More News

அந்த நாலுபேர் தான் எல்லாத்துக்கும் காரணம்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் திரையுலக பிரபலங்கள் குறித்து தகவல்களை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி

சிஎஸ்கே உடை இலவசம், ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10: பகல்கொள்ளையில் சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் போராட்டம்: பாரதிராஜா-வைரமுத்து உள்பட பலர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர், கவிஞர் வைரமுத்து

தோனியின் ரசிகர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்: பெரும் பரபரப்பு

சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் தடுக்க பல அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், அண்ணா சாலையில்

அஜித் குறித்து விஜய் தந்தை கூறியது என்ன தெரியுமா?

'அஜித் இன்னும் பல பிறந்த நாள்களை கொண்டாடி அவரது வாழ்க்கையும், தொழிலும் குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்