இரவோடு இரவாக மூடப்பட்ட டிரெக்கிங் நிறுவனம்? நிறுவனர் தலைமறைவு?

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

நேற்று தேனி அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை ஒருபுறம் மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும், தீயணைப்பு துறையினர்களும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையிடம் எந்தவித முன் அனுமதியும் இன்றி மாணவிகளையும், சிறுவர்களையும் எந்த வித பாதுகாப்பும் இன்றி டிரெக்கிங் அழைத்து சென்ற நிறுவனம் நேற்று இரவோடு இரவாக திடீரென மூடப்பட்டது. மேலும் இதன் நிறுவனரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னை பாலவாக்கத்தில் வீடு ஒன்றில் டிரெக்கிங் அலுவலகமாக இயங்கி வந்த இந்த டிரெக்கிங் கிளப்பை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் நடத்தி வந்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த 27 பேர்களை 2 பேர் தலைமையில் இந்நிறுவனம் டிரெக்கிங்ற்கு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தான் நேற்று திடீரென இந்த டிரெக்கிங் குழு, காட்டுத்தீயில் சிக்கியுள்ளது. பொதுவாக கோடையில் டிரெக்கிங் செல்ல வனத்துறையினர் அனுமதி தருவதில்லை. அதிலும் சிறுவர்கள் டிரெக்கிங் செல்லும்போது வனத்துறை அலுவலர்களின் பாதுகாப்பில்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த டிரெக்கிங் நிறுவனம் எந்த அனுமதியும் இன்றி, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி டிரெக்கிங் சென்றதால் தான் 9 பேர்களின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னை ட்ரெக்கிங் க்ளப் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டதாக யாரேனும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

More News

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்?

சீயான் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

மனதைப் பிழியும் சோகம்: காட்டுத்தீ விபத்து குறித்து கமல்

தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, கமாண்டோ படை, தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

தல, தளபதி குறித்து சிம்பு கூறியது என்ன?

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் கலந்து கொண்ட சிம்பு, தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்த தனது கருத்தை தெரிவித்தார்.

தேனி அருகே பயங்கர காட்டுத்தீ: 8 பேர் பலி, மீட்கப்பட்டவர்களின் விபரம்

தேனி அருகேயுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 40 மாணவிகள் சிக்கி கொண்டனர்.

எல்.கே.ஜிக்கு ரூ.2 லட்சமா? இது என்னடா பகல் கொள்ளையா இருக்குது!

பெங்களூர் பள்ளி ஒன்று எல்.கே.ஜி படிப்பிற்கு ரூ.2லட்சத்து 2 ஆயிரம் தொகை வசூலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள கையேடு ஒன்று இணணயதளங்களில் வைரலாகி வருகிறது